<?xml version="1.0" encoding="UTF-8"?><rss xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" version="2.0"><channel><title><![CDATA[I read, therefore I am]]></title><description><![CDATA[I read, therefore I am]]></description><link>https://writings.praka.sh</link><generator>RSS for Node</generator><lastBuildDate>Thu, 07 May 2026 07:47:53 GMT</lastBuildDate><atom:link href="https://writings.praka.sh/rss.xml" rel="self" type="application/rss+xml"/><language><![CDATA[en]]></language><ttl>60</ttl><item><title><![CDATA[நாங்கள்]]></title><description><![CDATA[என்னுள் சில தெய்வங்கள்
மேலும் சில அரக்கர்கள்
அழைக்காமல் வந்து 
தெய்வம் போல் நடித்து 
அலைக்கழிக்கும் அரக்கனாகவும்
மறந்தும் விலகாமல்
மறக்காமல் உதவும்
ஆனால் அவ்வப்போது
அரக்கனாய் நிலைக்கும் தெய்வமாகவும்
அடையாளம் அழிந்தோம் நாங்கள்!]]></description><link>https://writings.praka.sh/4k6o4k64k6z4kn4k6v4k6z4kn</link><guid isPermaLink="true">https://writings.praka.sh/4k6o4k64k6z4kn4k6v4k6z4kn</guid><dc:creator><![CDATA[Prakash Rajendran]]></dc:creator><pubDate>Tue, 25 Oct 2022 18:58:23 GMT</pubDate><enclosure url="https://cdn.hashnode.com/res/hashnode/image/unsplash/19SC2oaVZW0/upload/v1666810665329/lY9tkWIir.jpeg" length="0" type="image/jpeg"/><content:encoded><![CDATA[<p>என்னுள் சில தெய்வங்கள்</p>
<p>மேலும் சில அரக்கர்கள்</p>
<p>அழைக்காமல் வந்து </p>
<p>தெய்வம் போல் நடித்து </p>
<p>அலைக்கழிக்கும் அரக்கனாகவும்</p>
<p>மறந்தும் விலகாமல்</p>
<p>மறக்காமல் உதவும்</p>
<p>ஆனால் அவ்வப்போது</p>
<p>அரக்கனாய் நிலைக்கும் தெய்வமாகவும்</p>
<p>அடையாளம் அழிந்தோம் நாங்கள்!</p>
]]></content:encoded></item><item><title><![CDATA[இறத்தல்]]></title><description><![CDATA[சலித்தலும் மரத்தலும்
மறத்தலும் தவிர்த்து கடத்தலும் 
இறத்தலே!
கடக்க இயலாது துடிக்கும் வலிதரினும்
தளைகள் தகர்த்து உயிர்த்தெழும் விழைவை 
உணர்ந்து அறிந்து செயலாற்றும் ஆற்றலே இருத்தல்!]]></description><link>https://writings.praka.sh/4k6h4k6x4k6k4kn4k6k4k6y4kn</link><guid isPermaLink="true">https://writings.praka.sh/4k6h4k6x4k6k4kn4k6k4k6y4kn</guid><dc:creator><![CDATA[Prakash Rajendran]]></dc:creator><pubDate>Mon, 17 Oct 2022 13:15:58 GMT</pubDate><enclosure url="https://cdn.hashnode.com/res/hashnode/image/unsplash/_RBcxo9AU-U/upload/v1666012521705/k_W7Zl7Jn.jpeg" length="0" type="image/jpeg"/><content:encoded><![CDATA[<p>சலித்தலும் மரத்தலும்</p>
<p>மறத்தலும் தவிர்த்து கடத்தலும் </p>
<p>இறத்தலே!</p>
<p>கடக்க இயலாது துடிக்கும் வலிதரினும்</p>
<p>தளைகள் தகர்த்து உயிர்த்தெழும் விழைவை </p>
<p>உணர்ந்து அறிந்து செயலாற்றும் ஆற்றலே இருத்தல்!</p>
]]></content:encoded></item><item><title><![CDATA[படைப்பு]]></title><description><![CDATA[கடவுள் தன்னிலிருந்து ஒரு உயிர் பிரித்தெடுத்தான், அதை அழகுற செய்தான். அவள் மேல் கருணையையும் இரக்கத்தையும் வரங்களாய் பொழிந்தான். அவளிடம் ஒரு இன்பக் கோப்பையை அளித்தவாறே சொன்னான்
“சென்றதையும் வருவதையும் மறந்தாலொழிய இதை அருந்தாதே, இன்பம் என்பது அக்கணம் தவ...]]></description><link>https://writings.praka.sh/4k6q4k6f4ki4k6q4kn4k6q4kb</link><guid isPermaLink="true">https://writings.praka.sh/4k6q4k6f4ki4k6q4kn4k6q4kb</guid><category><![CDATA[தமிழ்]]></category><dc:creator><![CDATA[Prakash Rajendran]]></dc:creator><pubDate>Wed, 12 Oct 2022 03:30:42 GMT</pubDate><enclosure url="https://cdn.hashnode.com/res/hashnode/image/unsplash/DlkF4-dbCOU/upload/v1665519864855/gTUZFgjD_.jpeg" length="0" type="image/jpeg"/><content:encoded><![CDATA[<p>கடவுள் தன்னிலிருந்து ஒரு உயிர் பிரித்தெடுத்தான், அதை அழகுற செய்தான். அவள் மேல் கருணையையும் இரக்கத்தையும் வரங்களாய் பொழிந்தான். அவளிடம் ஒரு இன்பக் கோப்பையை அளித்தவாறே சொன்னான்</p>
<p>“சென்றதையும் வருவதையும் மறந்தாலொழிய இதை அருந்தாதே, இன்பம் என்பது அக்கணம் தவிர பிறிதில்லை என்பதால்”</p>
<p>அவளிடம் ஒரு துயரக்கோப்பையையும் அளித்த பின் சொன்னான்</p>
<p>”இதை அருந்து, உடனுடன் விரைந்தழியும் இன்பக் கணங்களையும், எப்போதுமாய் நிறைக்கும் துயரத்தையும் புரிந்து கொள்வாய்”</p>
<p>அறிந்து மகிழ்ந்து முதல் நிம்மதி பெருமூச்சு விடுந்தருணமே அவளை எப்போதுமாய் விட்டு பிரியும் காதலையும், முதன் முறையாய் செல்லப் பாராட்டை உணருந்தருணமே மறைந்தொழியும் இனிமையையும் அவளுக்கு அருளினான்.</p>
<p>நேர்மையான பாதையில் வழி நடத்தும் பேரறிவை சொர்க்கத்திலிருந்து அளித்தான்.</p>
<p>காணாததையும் காணும் திறன்மை கொண்ட ஒரு கண்ணை அவளின் இதயத்தில் ஆழப்பதித்தான். </p>
<p>அனைத்தையும் நேசிக்கும் நற்குணத்தை அளித்தான். </p>
<p>வானவில்லின் நரம்புகளிலிருந்து சொர்க்கத்தின் தேவதைகளால் நெய்யப்பட்ட நம்பிக்கையாலான ஆடையை அவளுக்கு அணிவித்தான். </p>
<p>வாழ்க்கையின், ஒளியின் விடியல் போன்ற குழப்பத்தின் நிழலை அவள் மேல் போர்த்தினான்.</p>
<p>அதன் பின் கோபத்தின் உலையிலிருந்து பசித்தெரிக்கும் தீயை எடுத்தான். </p>
<p>அறியாமை எனும் பாலையின் வறண்ட சூடான காற்றை எடுத்தான். </p>
<p>சுய நலத்தின் கரையிலிருந்து கூர்மையான வெட்டும் மணல் எடுத்தான். </p>
<p>காலத்தின் பாதத்திலிருந்து கரடான நிலம் எடுத்தான். </p>
<p>அனைத்தையும் சேர்த்து அவனை உருவாக்கினான்.  </p>
<p>ஆவேசமளித்து அவனை பித்தாக்குகின்ற ஆனால் ஆசையின் திருப்திக்கு முன்பே அணைந்து விடுகின்ற ஒரு கண்மூடித்தனமான சக்தியை அவனுக்கு அளித்தான். இறப்பின் ஆவியாய் உயிரை அவனுள் வைத்தான்.</p>
<p>அதன் பின் கடவுள் சிரித்தான். கடவுள் அழுதான். </p>
<p>அவன் மேல் அதீத அன்பையும் அலாதியான இரக்கத்தையும் கடவுள் உணர்ந்து அவனுக்கு வழிகாட்டி அரவணைத்தான்.</p>
]]></content:encoded></item></channel></rss>